சஞ்சார் சாத்தி, தொலைத்தொடர்புத் துறையின் குடிமக்கள் சார்ந்த முன்னெடுப்பு. இது கைபேசி பயனர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. மேலும், குடிமக்கள் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
சஞ்சார் சாத்தி உங்கள் டிஜிட்டல் உலகின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கிய செயலியாகும். தொலைத்தொடர்பு பயனர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் நிகழும் சைபர் குற்றங்கள், நிதி மோசடிகள், ஆள்மாறாட்டம் அல்லது வேறு எந்தத் தவறான பயன்பாட்டையும் தடுப்பதற்கான புகார்களை எளிதாக்குகிறது. அழைப்புகள், குறுஞ்செய்திகள் அல்லது வாட்ஸ்அப் வழியாக வரும் சந்தேகத்திற்குரிய மோசடி தகவல்களை உடனடியாக சஞ்சார் சாத்தி மூலம் தெரிவிக்கலாம். இது உங்கள் நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க ஒரு வலுவான கேடயமாக செயல்படுகிறது, பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதில் குடிமக்களின் பங்கை பலப்படுத்துகிறது.
உங்கள் விலைமதிப்பற்ற மொபைல் சாதனம் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ, சஞ்சார் சாத்தி அதை விரைவாகக் கண்டறிவதோடு, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நெட்வொர்க்குகளிலும் அதை முடக்குவதற்கும் உதவுகிறது, இதனால் அதன் தவறான பயன்பாட்டை முழுமையாகத் தடுக்கிறது. முடக்கப்பட்ட மொபைல் சாதனத்தைப் பயன்படுத்த முயற்சிக்கும்போது அதன் இருப்பிடம் கண்காணிக்கப்படும். மேலும், உங்கள் பெயரில் உள்ள மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கையை சரிபார்த்து, உங்களுக்குத் தேவையில்லாத அல்லது அறியாத இணைப்புகளைப் புகாரளிக்கலாம். உங்கள் மொபைலின் நம்பகத்தன்மையை அதன் IMEI எண் மூலம் சஞ்சார் சாத்தி உறுதிப்படுத்துகிறது. இந்திய எண்ணுடன் (+91-xxxxxxxxxx) வரும் சர்வதேச அழைப்புகள் குறித்துப் புகாரளிப்பதன் மூலம் சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகளைக் கட்டுப்படுத்த அரசுக்கு நீங்கள் உதவலாம்.
சஞ்சார் சாத்தி செயலியில் பதிவு செய்வது மிகவும் எளிது. 14522 என்ற எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் உங்கள் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு, உங்கள் மொபைல் எண்கள் பதிவு செய்யப்படுகின்றன. சஞ்சார் சாத்தி உங்கள் புகார்களை எளிதாக்கவும், பாதுகாப்பு அம்சங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தவும் சில அத்தியாவசிய அனுமதிகளைக் கோருகிறது – அழைப்பு/குறுஞ்செய்தி பதிவுகள், தொலைபேசி அழைப்புகளை நிர்வகித்தல், குறுஞ்செய்தி அனுப்புதல், புகைப்படங்கள் மற்றும் கேமரா அணுகல் போன்றவை இதில் அடங்கும். உங்கள் பாதுகாப்பே எங்களின் முதன்மை நோக்கம்; எனவே, பதிவான அழைப்பு/குறுஞ்செய்தி விவரங்கள் மட்டுமே தொடர்புடைய துறைக்கு அனுப்பப்படும், மற்ற தகவல்கள் உங்கள் சாதனத்திலேயே பாதுகாக்கப்படும். தொலைந்த/திருடப்பட்ட கைபேசி புகாருக்குப் படங்களைப் பதிவேற்றுவதற்கும், IMEI நம்பரின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் போது கேமரா மூலம் ஸ்கேன் செய்வதற்கும் இது பயன்படுகிறது. சஞ்சார் சாத்தி, பாதுகாப்பான டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்குவதில் உங்கள் நம்பிக்கைக்குரிய துணை.